போலீஸ் என நாடகமாடிய கும்பல்… இளைஞரின் கை, கால்களை வெட்டி கொடூரக் கொலை… அதிர்ச்சி பின்னணி…!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 9:19 pm
Quick Share

ராணிப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை கடந்த சனிக்கிழமை இரவு திருவள்ளூர் போலீசார் என கூறி ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், மறுநாள் காலையில் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு சுடுகாட்டு பகுதியில் சரத்குமார் கை மற்றும் இரண்டு கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், பாணாவரம் போலீஸாரால் சடலமாக மீட்கப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியம் உத்தரவின் பேரில், இரண்டு டிஎஸ்பி தலைமையிலான இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் இந்த படுகொலையானது, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், கடந்த ஓராண்டுக்கு முன்பு ரவுடி நித்யா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் முன் விரோத காரணமாகவும் நடைபெற்று இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேல் வீராணம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராமச்சந்திரன் என்ற குற்றவாளி ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களை பிடித்த தனிப்படை போலீசார், அவர்களை தக்கோலம் காவல் நிலையத்தில் வைத்து எவ்வாறு கொலை அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 843

0

0