Categories: தமிழகம்

ஊருணி ஆக்கிரமிப்பில் இருந்த தென்னை மரங்கள்…ஜேசிபி மூலம் வேரோடு அகற்றிய அதிகாரிகள்: தடுக்க முடியாமல் கதறிய பெண்கள்..!!

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே ஊருணி ஆக்கிரமிப்பில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்த முடியாமல் பெண்கள் கதறி அழுதனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியாத்தாள் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, பெரியாத்தாள் ஊருணி பகுதியில் பொதுப்பணி மற்றும் வருவாய்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மொத்தம் 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஊருணியில் 61 ஏக்கரை ஆக்கிரமித்து உள்ளூர் மக்கள் சிலர் விவசாயம் செய்து வருவது தெரியவந்தது. அதனைத் தொர்ந்து கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி தலைமையில், 4 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அங்குள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், எதுவும் செய்ய முடியாத நிலையில் பெண் ஒருவர் கதறி அழுதாஙர. ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதைவிட, அரசே அவற்றை பராமரிக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதை தவிர்த்து இதுநாள் வரை கஷ்டப்பட்டு வளர்ந்த மரங்களை வேரோடு சாய்ப்பது மனதை உலுக்குவதாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். பல வருடங்களாக பிள்ளை போல் வளர்ந்த மரங்களை வேரோடு அகற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

13 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

13 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

14 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

15 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

16 hours ago

This website uses cookies.