கரூர் ; குளித்தலை பழைய நெடுஞ்சாலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் சாலையை ஆக்கிரமித்து பெரும்பாலான கடைகள் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்டிஓ புஷ்பாதேவி தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம், சுங்ககேட், பெரிய பாலம் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடை, மளிகை கடை, ஹோட்டல் உள்ளிட்ட வணிகக் கடைகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்தவற்றை நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர்.
அதன் பிறகு, நகராட்சி தேர்தல் வந்ததையடுத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கைவிட்டனர். அதனை தொடர்ந்து, முறையாக ஆக்கிரமைப்புகளை அகற்றவில்லை என பல புகார்கள் வந்தது. அதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 10 நாட்களுக்கு முன்னரே அனைத்து வணிக கடைகளுக்கும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று கரூர் – திருச்சி பழைய நெடுஞ்சாலை குளித்தலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளின் முகப்புவாயில்கள், சாக்கடைநீர் செல்லும் வடிகாலை மறைத்துள்ள இடத்தையும் போலீசார் முன்னிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.