கோவை: கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது அவர்கள் கூறுகையில்,
” கோவை வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் எந்தவித முகாந்திரமும் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறு, சிறு பிரச்சினைகளுக்கு கூட வருவாய் துறை ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகைகளில் முக்கிய பிரமுகர் வருகையில் ஏற்படும் செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
துணை தாசில்தார் மீது பிறப்பிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்களில் நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டன.
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
This website uses cookies.