கோவை : கோவையில் கல்லூரி மாணவர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிகில். பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பி.காம் படித்து வருகிறார். நேற்று நிகில் வீட்டில் இருந்த போது அவரது சகோதரர் நிதின் போனில் அழைத்து, தன்னிடம் சிலர் செல்போன் பறிக்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நிகில் சம்பவ இடத்திற்கு சென்ற போது, நிதின் மற்றும் அவரது நணபரான கார்த்திக் ஆகியோரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை மூன்று பேர் அடங்கிய கும்பல் பறித்து சென்றது.
தொடர்ந்து நிகில் அவர்களிடம் சென்று, பணம் மற்றும் செல்போனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் கைகலப்பானதில் நிதின் மற்றும் நிகில் மீது அந்த மீது மூவரும் கடும் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், அம்மன்குளம் பகுதியை சேர்ந்த பிரவீன், மோசஸ், ஜகன் ஆகியோர் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.