பழனி மலை கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை அதிக பாரம் காரணமாக பாறை மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவைரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒருநாளும் வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ரோப்கார் சேவை காலை 7 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை செயல்படுகிறது. ஒரு பெட்டிக்கு நான்கு பேர் விதம் நான்கு பெட்டிகளில் 16 பேர் பயணம் செய்யலாம்.
இந்நிலையில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழுவினர் திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் உச்சிகால பூஜையில் தரிசனம் செய்வதற்காக குழுவினர் மலைக்கு சென்றனர். இவர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்காரில் சென்ற அடுத்த 20 நிமிடத்தில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்ற போது அதிகபாரம் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ரோப் கார் பாறையில் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதி வழியில் நின்றது. இதையடுத்து ரோப் கார் ஊழியர்கள் உடனடியாக பார்வையிட்டனர். இதனையடுத்து பெட்டிகளில் சிறிய சேதம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி கோவிலுக்கு 15 பேர் கொண்ட நவபாஷண சிலை பாதுகாப்பு குழு அமைக்கபட்டு மலைக்கோவிலுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே ரோப்கார் பாறையில் மோதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தான் பழைய பெட்டிகள் நீக்கபட்டு புதிய பெட்டிகள் பொருத்தபட்டுள்ளது குறிப்பிடதக்கது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.