கோவை : ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவி தொகையை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி வழங்கினார்.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் 1954 முதல் 1987ஆம் ஆண்டு வரை டர்னர் அண்ட் நிவால் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ நிதி உதவி வழங்கும் விழா கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி, 64 பேருக்கு ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ நிதி உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் மற்றும் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மற்றும் மதுக்கரை ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், விழாவுக்கான ஏற்பாடுகளை மதுக்கரை கே. காளிமுத்து, மெரினாஹாட், மயில்வாகனன், கணேசன், நடராஜ், சசிதரன், ஜாகிர்உசேன் மற்றும் ரீட்டா ஆகியோர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.