கோவை : ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவி தொகையை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி வழங்கினார்.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் 1954 முதல் 1987ஆம் ஆண்டு வரை டர்னர் அண்ட் நிவால் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ நிதி உதவி வழங்கும் விழா கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி, 64 பேருக்கு ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ நிதி உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் மற்றும் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மற்றும் மதுக்கரை ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், விழாவுக்கான ஏற்பாடுகளை மதுக்கரை கே. காளிமுத்து, மெரினாஹாட், மயில்வாகனன், கணேசன், நடராஜ், சசிதரன், ஜாகிர்உசேன் மற்றும் ரீட்டா ஆகியோர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.