திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலா தளமான கொடைக்கானலில் நகராட்சி பகுதியில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம்.இச்சந்தையில் கொடைக்கானல் நகராட்சிப் பகுதி மட்டும் அல்லாமல் ஊராட்சி பகுதி மக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தை சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து விற்பனைக்காக காய்கறி மற்றும் மற்ற பொருட்களை கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்யும் வியாபாரிகள் சந்தை ஒப்பந்தகாரர் 100 ரூபாய் வசூல் செய்வதாக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
ஆனால் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமல்லாமல் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. இன்று நடைபெறும் காய்கறி சந்தையில் அரசு முத்திரை இல்லாமல் ஒப்பந்ததாரர் வசூல் செய்கிறார்.
கொடைக்கானல் நகராட்சி பொதுமக்களுக்கான நகராட்சி கிடையாது இது போன்ற ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவான நகராட்சி ஏற்கனவே நகராட்சி பகுதிகளில் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கிறது.
அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது என சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அதையும் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
அப்படியிருக்கும்போது கொடைக்கானல் நகராட்சி வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரர் வசூல் செய்வது எப்படி, நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கேட்பார்கள் என்ன நடந்தாலும் நகராட்சி அதிகாரிகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருப்பார்கள் என்று கூறிச் சென்றனர் பொதுமக்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வியாக அமைந்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.