Categories: தமிழகம்

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை பணிகளை புறக்கணிக்கும் வருவாய் துறை ஊழியர்கள்… கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எதிராக போராட்டம்!

ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம் : வாக்குவாதம் முற்றியதால் போலீசார் – அலுவலர்கள் இடையே தள்ளுமுள்ளு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் சிலர் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டி வசித்து வந்ததாக, அந்த வீடுகளை இடிக்க வேண்டும் என, அந்த கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி செயலாளர் ஆகியோர் அந்த வீடுகளை இடித்து தரைமட்டமாக்க நடவடிக்கை எடுத்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் ஆலோசித்து விட்டு, சம்மந்தப்பட்ட வாணாபுரம் வட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த 9ஆம் தேதி அந்த வீடுகளை இடித்துள்ளார்.

அந்த வீடுகள் அரசு புறம்போக்கு நிலத்திலும், பட்டா நிலத்திலும் இரண்டற கலந்திருந்த நிலையில், பட்டா நிலத்தில் இருந்த வீடுகளும் இடிக்கப்பட்டதால் அப்போது, பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அந்த வீடுகளை முன்நின்று இடித்த தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை பணியிடை நீக்கம் செய்த உத்தரவினை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.

இதையடுத்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இணைந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் இன்றைய தினம் ஈடுபடுவதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வந்தனர்.

அப்போது, இவர்களை ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழைய விடாமல் பேரிகாடுகள் அமைத்து, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பேரிகாடுகளை இழுத்துத் தள்ளி விட்டு உள்ளே நுழைய முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் போலீசார் எதிர்ப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து, தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அரை மணி நேரம் கழித்து, போராட்டக்காரர்கள் ஆட்சியர் அறைக்கு முன்பாக சென்று, அங்கு தரையில் அமர்ந்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அனைவரையும் இரவு கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர் 110 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைக் கண்டித்து இன்று 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வேலைகளை புறக்கணிக்கும் வருவாய்த் துறை ஊழியர்களின் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

5 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

6 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

6 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

7 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

8 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

9 hours ago

This website uses cookies.