திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் இருந்து வருமான வரித்துறை வரி வசூலிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மக்களவைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் தாமோதரன் என்பவரது வீட்டில் இருந்து 11 கோடியே 48 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் கதிர் ஆனந்திற்கு சொந்தமானது எனக் கூறி, அதற்கான வரியை செலுத்தவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதனை எதிர்த்து வேலூர் தொகுதி திமுக எம்.பி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பதில் அளிக்க அவகாசம் வழங்க வருமான வரித்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதே நேரம் இவ்வழக்கில் தனி நீதிபதி நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால், கதிர் ஆனந்திடம் இருந்து வரி வசூலிப்பதை நான்கு வாரத்திற்கு நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.