கோவை: காந்திபுரம் பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை வாடிக்கையாளர்கள் மூலம் மோசடி செய்து, ரூ.32 லட்சம் வரை கையாடல் செய்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நகை மதிப்பீட்டாளரை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் காந்திபுரம் லட்சுமி விலாஸ் வங்கி தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் நபரான ஜெயசங்கர் வேலை செய்து வந்தார். இவர், வங்கியின் வாடிக்கையாளர்களிடம், தன் வங்கியில் வேலை செய்வதால், தன் குடும்பத்தாரின் நகையை தானே அடகு வைக்க முடியாது என்று தெரிவித்து, நகைகளை தனக்கு அடமான வைக்க உதவுமாறு கேட்டுக் வந்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு உதவ முன் வந்த வாடிக்கையாளர்களிடம், போலி நகைகளை கொடுத்து அடமானம் வைத்து கடன் பெற்று வந்துள்ளார். இவர் செய்து வந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த நிலையில், வங்கி சார்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் ஜெயசங்கரை கைது செய்தனர்.
போலி நகைகளை அடமானம் வைத்து, தங்க நகை மதிப்பீட்டாளரே மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.