கோவை: மாநகராட்சியில் உள்ள 21 வரி வசூல் மையங்களில் நேற்று ஒரே நாளில் 33 லட்சம் ரூபாய் வரியினங்கள் வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சிக்கு நடப்பு 2021-22ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்துக்கு, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, காலியிட வரி ஆகியவற்றை மக்கள் செலுத்தி வருகின்றனர்.
இதற்கென, 21 மாநகராட்சி வரி வசூல் மையங்கள் தினமும் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்கள் உடனடியாக வரி செலுத்தும் வசதிக்காக நேற்று முதல் வரும், 31ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும், வரி வசூல் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று, 21 வரி வசூல் மையங்களிலும், 33 லட்சம் ரூபாய் வரி வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகராட்சியில் நேற்று காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி என அனைத்து பிரிவிலும், 33 லட்சம் ரூபாயை பொது மக்கள் செலுத்தியுள்ளனர். tnurbanepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இணையதள முகவரி வாயிலாகவும் வரி செலுத்தலாம்’ என்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.