லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஆதித்யன், 32. இவர், சிங்கப்பூரில் பட்டயபடிப்பு படித்தவர். தனக்கு வெளிநாட்டு தொடர்புகள் நிறைய இருப்பதாகவும்,அதன் மூலம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித்தர முடியும் என்றும், நண்பர்கள் வட்டாரத்தில் தகவல் பரப்பினார்.
அதை நம்பிய பலரும், ஆதித்யனை தேடி வந்தனர். அவர்களிடம், ‘லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தர பிரிட்டன் விசா வாங்குவதற்கு பணம் செலவாகும்’ என்று கூறி, பெரும் தொகையை வசூலித்துள்ளார். வெளிநாட்டு வேலைக்கு போகும் ஆசையில் இருப்பவர்களின் ஏமாளித்தனத்தை பொறுத்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளார்.
கார்த்திக், பிரபாகரன் என்ற இரு ஐ.டி., இன்ஜினியர்களிடம் மட்டும், 38 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். இப்படி பணம் கொடுத்த எவருக்கும், சொன்னபடி ஆதித்யன் வேலை வாங்கித்தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, அவர்களை மிரட்டவும் தொடங்கினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த கார்த்திக், பிரபாகரன் ஆகியோர் கொடுத்த புகார்படி, ஆதித்யன் கைது செய்யப்பட்டார். கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், ஆதித்யனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.