லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஆதித்யன், 32. இவர், சிங்கப்பூரில் பட்டயபடிப்பு படித்தவர். தனக்கு வெளிநாட்டு தொடர்புகள் நிறைய இருப்பதாகவும்,அதன் மூலம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித்தர முடியும் என்றும், நண்பர்கள் வட்டாரத்தில் தகவல் பரப்பினார்.
அதை நம்பிய பலரும், ஆதித்யனை தேடி வந்தனர். அவர்களிடம், ‘லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தர பிரிட்டன் விசா வாங்குவதற்கு பணம் செலவாகும்’ என்று கூறி, பெரும் தொகையை வசூலித்துள்ளார். வெளிநாட்டு வேலைக்கு போகும் ஆசையில் இருப்பவர்களின் ஏமாளித்தனத்தை பொறுத்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளார்.
கார்த்திக், பிரபாகரன் என்ற இரு ஐ.டி., இன்ஜினியர்களிடம் மட்டும், 38 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். இப்படி பணம் கொடுத்த எவருக்கும், சொன்னபடி ஆதித்யன் வேலை வாங்கித்தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, அவர்களை மிரட்டவும் தொடங்கினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த கார்த்திக், பிரபாகரன் ஆகியோர் கொடுத்த புகார்படி, ஆதித்யன் கைது செய்யப்பட்டார். கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், ஆதித்யனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.