சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இவர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக காதர்உசேன், சையது அலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி- எஸ்ஐடி பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சையத்அலி மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த காதர் உசேன் ஆகிய இருவர் வீட்டிலும் சிபிசிஐடி காவல்துறையினர் 4 மணி நேரத்திற்கு மேலாக அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை சிபிசிஐடி காவல் ஆய்வாளர்கள் செல்வமீனாட்சி, ராஜேஸ்வரி தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? இவர்கள் வேறு ஏதாவது செய்வதற்கு திட்டமிட்டார்களா? என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.