Categories: தமிழகம்

பெண் ஊழியரை தாக்கி மானபங்கம் செய்த திமுக நிர்வாகி: சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால் அடாவடி..!!

சேலம்: தலைவாசல் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த கூறிய பெண் ஊழியரை திமுக நிர்வாகி தாக்கி மானபங்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நத்தக்கரை சுங்கச்சாவடி உள்ளது. இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் 14 பெண் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நத்தக்கரையை சேர்ந்த தமிழ்மணி என்பவரின் மனைவி நிர்மலாதேவியும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை 10.35 மணிக்கு கார் ஒன்று சுங்கச்சாவடியை கடந்துள்ளது. இந்த காரில் திமுக பிரமுகர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது, காரை நிறுத்தி அவர்களிடம் சுங்கச்சாவடி பெண் ஊழியர் நிர்மலா சுங்ககட்டணம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் நாங்கள் திமுக நிர்வாகிகள் எனவே, பணம் தர முடியாது என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். அதற்கு, நிர்மலா தேவியோ, சுங்க கட்டணம் செலுத்துங்கள் அல்லது அடையாள அட்டையை காண்பியுங்கள் என வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அவர்கள் மறுக்கவே வாகனத்தை விடுவிக்கவில்லை. உடனே காரில் வந்தவர்கள் இதுகுறித்து, தலைவாசல் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நிவாசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே நிவாஸ் சுங்கச்சாவடிக்கு மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தார்.

சுங்கச்சாவடியை வந்தடைந்ததும், கேட்டை அவரே எடுத்துவிட்டு அந்த காரை அனுப்பி உள்ளார். இதுகுறித்து, சுங்கச்சாவடி பெண் ஊழியர் நிர்மலாதேவி ‘எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி நீங்கள் சுங்கச்சாவடி கதவை திறந்துவிடலாம்’ என கேட்டதற்கு அந்த பெண் ஊழியரிடம் நிவாஸ் வாக்குவாதம் செய்து உள்ளார்.

அப்போது வாய்த்தகராறு முற்றி அந்த பெண் ஊழியரை தனது கைகளால் சரமாரியாக நிவாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஊழியர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து நிர்மலாதேவி தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், தலைவாசல் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நிவாஸ் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நத்தக்கரை சுங்கச்சாவடி பெண் ஊழியரை தாக்கியதாக தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் தலைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.