ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது வழங்கி உலக அளவில் முதலிடம் என்ற கவுரவம் பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி 10 வனச்சரகங்களை உள்ளடக்கிய புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
இந்த புலிகள் காப்பகம் 1455 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கடந்த 2013 ஆம் ஆண்டு 30 புலிகள் என்ற எண்ணிக்கை கொண்ட புலிகள் காப்பகமாக செயல்படத் துவங்கியது. உலகளவில் புலிகளை பாதுகாப்பதற்காக ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட கன்சர்வேஷன் அண்டு டைகர், டைகர் ஸ்டேன்டர்டு, வேல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி உலகளாவிய நிதியகம் இதன் நோக்கம் 2010ஆம் ஆண்டு தொடங்கி எதிர் வரும் 10 ஆண்டுகளில் உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்பதாகும்.
அவ்வாறு உயர்த்திய நாடுகளுக்கு TS-2 என்ற சர்வதேச விருதினை இந்த கூட்டமைப்பு வழங்குகிறது. கடந்த 2013ம் ஆண்டு 30 புலிகளாக இருந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்தியதில் உலக அளவில் இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் முதல் இடம் பெற்றுள்ளதாக இந்த கூட்டமைப்பு அறிவித்து TS-2 விருதினையும் அறிவித்துள்ளது.
2-வது இடத்தை நேபாளம் நாட்டில் உள்ள பார்டியா தேசிய பூங்கா பெற்று உள்ளது. தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத்துறையின் முயற்சி, பழங்குடியின மக்களின் ஆதரவு போன்றவற்றால் புலிகள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து உள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக காணொலி காட்சி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருதை கூட்டமைப்புகள் வழங்கியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.