கோவை: கோவையில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை அவர்களது பெற்றோர் கடத்தி கொலை செய்ய முயல்வதாகக் கூறி காரில் இருந்து சத்தம்போட்டபடி இறங்கியவர்களை போலீசார் மீட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வர் (22). இவரும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்நேகா (19) என்பவரும் காதலித்து வந்த நிலையில், நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து இருதரப்பையும் சமாதானப்படுத்திய போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விக்னேஷ்வர் மற்றும் அவரது மனைவி ஸ்நேகா இருவரும் இன்று, ஸ்நேகாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதாகக் கூறிய ஸ்நேகாவின் பெற்றோர் அவர்களை காரில் அழைத்துக் கொண்டு அவினாசி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த போது, ஸ்நேகா தரப்பு விக்னேஷ்வர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் அலறி அடித்துக் கொண்டு காரில் இருந்து வெளியே வந்தனர். தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு பந்தயசாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காதல் ஜோடிகள் கடத்தப்பட்ட விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.