Categories: தமிழகம்

போராட்டத்தில் குதித்த பள்ளிக் குழந்தைகள் : நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய கோரி பிஞ்சுகளின் மறியலால் பரபரப்பு!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை சரி செய்து தரக்கோரி பள்ளி குழந்தைகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையம் எதிரில் நகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் கட்டிடங்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளதால் இங்கு குழந்தைகள் உணவு அருந்த அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதனை சரி செய்து தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளி குழந்தைகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இங்கு 500 குழந்தைகள் படித்து வருவதாகவும் குழந்தைகளுக்கு கல்வி கற்று தர போதிய ஆசிரியர்கள் இல்லை எனவும் கூறி பள்ளி குழந்தைகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தனது பெற்றோர்களுடன் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் சரவணகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த குழந்தைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டிடங்களை ஆய்வு செய்து உடனடியாக சிதிலம் அடைந்துள்ள கட்டங்களை சரி செய்து தரப்படும் எனவும் கல்வி கற்று தர மேலும் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் எனவும் உறுதியளித்தை அடுத்து பள்ளி குழந்தைகள் கலைந்து சென்றனர்.

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி குழந்தைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

8 minutes ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

1 hour ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

16 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

17 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

17 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

18 hours ago

This website uses cookies.