கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு இந்திரா நகர் உள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தரைப்பாலம் வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அன்றாட தேவைகளுக்காக வெளியூர் மற்றும் மருத்துவ தேவைக்காகவும், பள்ளி மாணவர்களும் இந்த முஸ்க்குந்தா நதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆற்றை கடந்து செல்லும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு பள்ளிகளுக்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆற்றை கடக்காமல் சுற்றி செல்லும்போது சுமார் 11 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி 11 கிலோமீட்டர் சுற்றி செல்லும்போது பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும் மருத்துவமனைக்கு ,பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
எனவே மழைக்காலங்களில் முகுந்தா நதியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் செல்வதால் ஆபத்தான முறையில் அச்சத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் மழைக்காலங்கள் வந்தால் உயர்மட்ட மேம்பாலம் இல்லாததால் எங்கள் கிராமத்தில் பல உயிரிகளை இழுந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் கிராமமக்கள் எளிதாக அன்றாட தேவைகள் மற்றும் மருத்துவம் பள்ளிக்குச் செல்ல உயர்மட்ட மேம்பாலம் அமைத்தது கொடுக்க வேண்டுமென பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் இதுவரை இவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி தங்களுக்கு அன்றாட தேவைகள் மருத்துவம் மற்றும் கல்வி எளிதாக கிடைக்க உயர்மட்ட மேம்பாலம் உடனடியாக அமைத்துக் கொடுக்க வேண்டுமென அக் கிராம ப மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.