கோவை ; சிறுமியை ஆபத்தான முறையில் அமர வைத்து பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரின் அலட்சியம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான வகையில் பள்ளி வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அளிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட சிலர் அதை முறையாக கடைபிடிப்பதில்லை.
குறிப்பாக, தனியார் வாகனங்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஓட்டுநர்கள் பலரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதற்கு உதாரணமாக கோயம்புத்தூர் கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட அத்திப்பாளையம் சந்திப்பு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் டெம்போ ட்ராவலர் வாகனத்தில் ஓட்டுநர் இருக்கைக்கு மிக அருகே ஜன்னல் ஓரமாக நான்கு வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியை அமரச் செய்து ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் பொதுமக்களால் படம் பிடிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என ஓட்டுனரிடம் எச்சரித்த போதும், புகார் கொடுங்கள் என தைரியமாக அவர் பேசும் காட்சியும் உள்ளது.
பொறுப்பற்ற முறையில் பள்ளி வாகனங்களை இயக்கம் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது போல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.