செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வித்யா குமார் மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படியுங்க: பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!
இதையடுத்து நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் உச்சநீதிமன்றம். இந்த நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம், அதனால் செந்தில் பாலாஜிக்கு புதிய கட்டுப்பாடு தேவையில்லை என கூறியது.
ஆனால் செந்தில் பாலாஜிக்கு இனி எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது, டெல்லி முதல்வர் தலைமை செயலகம் செல்லக்கூடாது என்ற உத்தரவை போல இவருக்கும் உத்தரவிட வேண்டும், கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் கிடையாது, பதவியா? ஜாமீனா? என்ற கேள்விக்கு பதில் அளித்துவிட்டோம், எனவே மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.