Categories: தமிழகம்

பட்டதாரிகளை குறி வைத்து பல லட்சம் ரூபாய் அபேஸ்.. டீக்கடை நடத்தி மோசடி செய்த இளம்பெண்!

கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா. இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை மட்டும் குறி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அரசு துறைகளான பட்டு வளர்ச்சித் துறை ,ஊரக வளர்ச்சித்துறை, பதிவுத்துறை ஆகிய துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு சில லட்சங்கள் லஞ்சம் தர வேண்டும் எனவும் கூறி ஒவ்வொரு பட்டதாரியிடமும் இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை நிர்ணயித்து வசூல் செய்து வந்துள்ளார்.

பணம் கொடுத்து ஆறு மாதத்திற்குள் அரசு வேலை நிச்சயம் என்று வாக்குறுதி தந்த நிரஞ்சனா இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு வேலையும் வாங்கித் தராததால் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்த பட்டதாரிகள், நிரஞ்சனாவை நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது தனக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை நன்றாக தெரியும்., தன்னை மிரட்டி பார்த்தால் விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என அச்சுறுத்தியுள்ளார் நிரஞ்சனா.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சுமார் 9 பேர் 27 லட்சம் ரூபாய் வரை தங்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக நிரஞ்சனா மீது கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

எந்த ஒரு அலுவலகமும் நிரந்தர முகவரியும் இல்லாமல் இருக்கும் நிரஞ்சனா என்ற இளம் பெண்ணை நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ள பட்டதாரிகள் எப்படியும் தங்களுக்கு அவர் அரசு துறையில் வேலை வாங்கித் தருவார் என்ற நம்பிக்கையுடன் பணம் கொடுத்தோம்., ஆனால் இப்படி ஏமாற்றுவார் என்று தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

தனது நண்பர்கள் மூலமாக ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்ளும் நிரஞ்சனா ஆட்களுக்கு தகுந்தார் போன்று ஆசை வார்த்தைகள் கூறி பணம் வசூலித்ததும் அதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
காவல்துறையினரிடம் புகார் அளித்து அவர்கள் குற்றவாளிகளை பிடித்து விசாரிப்பதற்கு தாமதமாகும் என்று கருதி பாதிக்கப்பட்டவர்களே பண மோசடியில் ஈடுபட்ட நிரஞ்சனாவை பிடித்து மாநகர குற்ற பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சூழலில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

7 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.