7 வருடங்களுக்கு பின் நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி.. அதே இடத்தில் தீக்குளித்த நபர் : விசாரணையில் ஷாக்!
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதகுளத்தை சேர்ந்தவர் பெயர் சங்கரசுப்பு, (வயது 35). இவர் தனது குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சினை காரணமாக மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதற்கான சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்திருந்தார்.
அப்போது திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாதுகாப்புகள் நின்ற காவல்துறையினர் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து மீட்டனர்.
தொடர்ந்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கு முயன்ற சங்கரசுப்புவை மீட்க சென்ற ஆட்சியர் அலுவலக வாசலில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் அப்துல்ஹமீதுக்கும் கையில் லேசான தீ காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பணிக்கு வரும் போதெல்லாம் பாலியல் டார்ச்சர்.. செவிலியர் தற்கொலை முயற்சி : விசாரணையில் சிக்கிய மருத்துவர்.!
கடந்த 7வருடங்களுக்கு முன்பு 2017ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்தனர். உடனே மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மண்ணென்னை, பெட்ரோல் போன்ற எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்கள் ஆட்சியர் அலுவலகத்தில் எடுத்து செல்ல கூடாத வகையில் உத்தரவிடப்பட்டது. கடும் சோதனைக்கு பிறகே மனுதாரர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அன்றில் இருந்து இந்த உத்தரவு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது எப்படி அந்த நபர் மண்ணென்ணை எடுத்து வந்தார் என போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.