சிவகங்கை : வழக்கறிஞர்களாக பணிபுரியும் கணவன் மனைவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் குமரகுரு. இவரது மனைவி வித்யா ஸ்ரீ. கணவன், மனைவி இருவரும் காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் கணபதி என்பவருக்கும், குமரகுருவுக்கும் வழக்கு ஒன்றில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணபதி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் குமரகுரு வீட்டிற்குள் புகுந்து குமரகுரு மற்றும் அவரது மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அவ்வழியாகச் சென்ற மாரி என்பவர் தடுக்க முயன்ற போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிய மூவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.