சிவகங்கை : வழக்கறிஞர்களாக பணிபுரியும் கணவன் மனைவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் குமரகுரு. இவரது மனைவி வித்யா ஸ்ரீ. கணவன், மனைவி இருவரும் காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் கணபதி என்பவருக்கும், குமரகுருவுக்கும் வழக்கு ஒன்றில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணபதி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் குமரகுரு வீட்டிற்குள் புகுந்து குமரகுரு மற்றும் அவரது மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அவ்வழியாகச் சென்ற மாரி என்பவர் தடுக்க முயன்ற போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிய மூவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.