காரைக்குடியில் வீட்டில் குடியிருந்த வரை காலி செய்யச் சொன்ன உரிமையாளரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சிப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதி செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சரவணன். வீட்டின் மாடியை தேவி என்பவருக்கு மூன்று லட்ச ரூபாய் ஒத்திக்கு விட்டுள்ளார். ஒத்தி காலம் முடிந்ததும் மூன்று லட்ச ரூபாயை திரும்ப கொடுத்து சரவணன் வீட்டை காலி செய்யச் சொல்லியுள்ளார். ஆனால் தேவி வீட்டை காலி செய்ய மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவி தனது உறவினரான குமார் என்பவருக்கு போனில் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடம் வந்த குமார், கையோடு கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து சரவணனை வெட்ட முயன்றுள்ளார்.
சரவணன் கீழே விழுந்து தப்பித்த நிலையில் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்ய முயற்சித்து தப்பியோடிய குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தேவியை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.