திருவள்ளூர் அருகே சகோதரர்களை கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், அண்ணன் உயிரிழந்த நிலையில், தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி எஸ்பி கோயில் தெருவில் வசிக்கும் பாபு – விஜயலஷ்மி. இவர்களது வீட்டுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு, அவர்களின் இரண்டு மகன்களான ரமேஷ் (13) மற்றும் தேவராஜ் (12) ஆகியோரை கடித்தது. இதையடுத்து, கடித்த பாம்பினை கொண்டு சென்றுஇருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அதில் 13 வயது சிறுவன் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தம்பி தேவராஜுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டுவிரியன் பாம்பு கடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஆரணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பாம்பு கடித்த சிறுவனுக்கு அருகில் உள்ள பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் விஷமுறிவு மருந்து இல்லாத நிலையில், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க காலதாமதமானதால் உயிரிழந்ததாக, சிறுவனின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பாம்பு கடிக்கு விஷம் முறிவு மருந்து போதிய அளவில் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் எனவும், உயிரிழந்த கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஆங்காங்கே அருகிலேயே உள்ள அரசு மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்தினை தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், மழை காலம் தொடங்கியுள்ளதால் ஆரணி பேரூராட்சி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால், அதிக அளவு பாம்புகள், விஷப்பூச்சிகள் உள்ளதாகவும், எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய முறையில் அதனை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.