நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் (35). இவர், நெல்லையில் முறைப்படி அனுமதி பெறாமல் கட்டி திறக்கப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் குறித்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதேபோல, மாநகராட்சியில் அனுமதி பெறாத கட்டடங்கள் மற்றும் நெல்லை மாநகராட்சியின் ரோடு காண்ட்ராக்டில் தனியார் நிறுவனம் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட விவகாரம் மற்றும் மணல் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், சமூக அக்கறையுடன் கேள்விகள் எழுப்பி வருகிறார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு… சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!!
இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தனியார் பேட்மின்டன் கிளப்பில் விளையாடுவதற்காக சென்றிருந்தார். அப்போது அங்குவந்த ஒரு நபர், தான் வைத்திருந்த அரிவாளால் பெர்டின் ராயனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முதுகு, கைகளில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எதற்காக பெர்டின் ராயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட அதே தினத்தில், சமூக ஆர்வலர் மீது அரிவாள் வெட்டு நடந்திருப்பது நெல்லை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.