திரும்பும் இடமெல்லாம் போஸ்டர் ஒட்டுவதால் விபத்து அபாயம் இருப்பதாக கூறி உடல் முழுவதும் போஸ்டரை தொங்க விட்டு நூதன முறையில் மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது, சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் என்பவர் உடல் முழுவதும் போஸ்டர்களை தொங்க விட்டபடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது, அவர் கூறியதாவது :- நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அரசு பள்ளி சுவர்கள், தாலுகா ஆபிஸ், தேர்தல் ஆணைய சுவர்கள், பேருந்து நிலைய சுவர்கள், அரசு பாளையங்கள் பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர்மயமாக உள்ளது.
வாகனத்தில் செல்வோர் இந்த போஸ்டர்களால் கவனம் திசை திரும்பி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர் தற்போது மாறி திருநெல்வேலி போஸ்டர் சிட்டி என்ற அளவில் போஸ்டர் மயமாக காணப்படுகிறது.
எனவே, உடனடியாக அரசு தலையிட்டு கல்விக்கூடங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறி தனது உடலில் போஸ்டர்களை கட்டி மனு அளிக்க வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து கிருஷ்ணகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பொது இடங்களில் போஸ்டர் ஒட்டப்படுவதால் மக்கள் அதை வேடிக்கை பார்க்கும் போது விபத்து ஏற்படும். எங்கு பார்த்தாலும் போஸ்டர் ஒட்டுகிறார்கள்.
விட்டால் மக்களின் முகத்தில் கூட போஸ்டர் ஒட்டுவார்கள். எனவே, இந்த போஸ்டர் ஓட்டுவதை தடுக்கக் கோரி ஆட்சியிடம் மனு அளிக்க வந்தேன், என்று கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.