சமூக வலைத்தளத்தில் (Twitter) தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி அவதூறு வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி கவிஞர் வைரமுத்து அவர்களின் குரலில் பேசுவது போன்று தவறாக சித்தரித்து அவதூறு பரப்பும் வகையிலான வீடியோ X வலைத்தளத்தில் drsenthil என்ற twitter பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தி.மு.க மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, புகார் தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்ஆய்வாளர் தகழனியப்பன், தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தகணபதி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சர்சைக்குரிய பதிவு தொடர்பாக twitter வலைத்தளபக்கம் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளி, தெற்குவாடியகாடை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செந்தில்நாதன் என்பதும் இவர் BE Computer Science படித்துவிட்டு பெங்களூரில் உள்ள L&T Technology Services (LTTS) என்ற தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
தொடந்து அவரின் சமூகவலைதள பக்கங்களை ஆய்வு செய்ததில் இவர் சமூகவலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுபவர் என்பது தெரியவந்ததை, தொடர்ந்து செந்தில்நாதனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.