கருணாநிதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பதிவு ; வைரலான வீடியோ… தனிப்படை அமைத்து பொறியாளரை பிடித்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 10:22 am
Quick Share

சமூக வலைத்தளத்தில் (Twitter) தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி அவதூறு வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி கவிஞர் வைரமுத்து அவர்களின் குரலில் பேசுவது போன்று தவறாக சித்தரித்து அவதூறு பரப்பும் வகையிலான வீடியோ X வலைத்தளத்தில் drsenthil என்ற twitter பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தி.மு.க மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, புகார் தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்ஆய்வாளர் தகழனியப்பன், தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தகணபதி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

சர்சைக்குரிய பதிவு தொடர்பாக twitter வலைத்தளபக்கம் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளி, தெற்குவாடியகாடை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செந்தில்நாதன் என்பதும் இவர் BE Computer Science படித்துவிட்டு பெங்களூரில் உள்ள L&T Technology Services (LTTS) என்ற தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

தொடந்து அவரின் சமூகவலைதள பக்கங்களை ஆய்வு செய்ததில் இவர் சமூகவலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுபவர் என்பது தெரியவந்ததை, தொடர்ந்து செந்தில்நாதனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 353

0

0