திண்டுக்கல் : பழனி அருகே குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட தந்தையை, மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சத்திரப்பட்டி. இங்குள்ள முல்லைநகர் பகுதியில் ஓமந்தூரான் என்பவர் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார்.
இவர் கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். தினமும் குடித்துவிட்டு, மனைவி மற்றும் மகன், மகளிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஓமந்தூரான் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.மேலும் தனது மனைவி மற்றும் மகளை அடித்ததாக தெரிகிறது.
இதனையடுத்து ஒமந்தூரானின் மகன் கிரிவிஷ்ணு தந்தையை தடுத்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்காவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்தநிலையில், ஆத்திரம் அடைந்த மகன் கிரிவிஷ்ணு அங்கிருந்த கிரிக்கெட் மட்டையால் தந்தையை தலையில் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஓமந்துரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மகன் கிரிவிஷ்ணு கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.