நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் சொல்வதுபோல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், அடுத்த நொடியே நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்று தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள புனித அன்னாள் செவிலியர் கல்லூரியில் பயின்று முடித்துள்ள பிஎஸ்சி நர்சிங் மற்றும் டிப்ளமோ நர்சிங் மாணவிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எம்எல்ஏ கலந்துகொண்டு பி.எஸ்சி நர்சிங்-கில் 8வது பேட்ச் முடித்துள்ள 40 மாணவிகள், அதைபோல் டிப்ளமோ 46வது பேட்ச் முடித்துள்ள 50 மாணவிகள் என மொத்தம் 90 மாணவிகளுக்கு பட்டமளிப்பை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், அருட்சகோதரி பவுலின் அகஸ்டின் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனியார் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பின்னர் பேசிய தமிழக சட்ட பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில், ஜி.எஸ்.டி-யில் இந்தியாவில் மிக அதிக வசூல் செய்து கொடுக்ககூடிய மாநிலத்தில் 2-இடத்தில் இருக்கூடியது தமிழகம்தான். இதனை பிடிக்காத சிலர் நீட் தேர்வு என்ற ஒன்றினை கொண்டுவந்து நமது கல்விகொள்கையை சீர்குழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலினும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸாடாலினும் கல்வி கட்டமைப்பை அழிப்பதற்காக கொண்டு வந்ததுதான் நீட் தேர்வு. அதனை கொண்டுவரவிடக்கூடாது என்பதற்காகதான் கடுமையாக போராடுகின்றனர். ஒரு காலத்தில் 94-சதவீதம் பேர் படித்து பட்டம்பெற்ற அந்த 4-சதவீதம் பேர்தான் இந்த நீட் தேர்வை எல்லோருக்கும் கிடைக்ககூடாது என்று நினைப்பதாக தெரிவித்தார்.
எனவேதான் நாடாளுமன்ற தேர்தலில் நமது முதல்வர் சொல்வதுபோல் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், அடுத்த நொடியே நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்று தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.