புதுச்சேரி : வேலை கேட்பது போல் சென்று பெண் மீது மிளகாய் தூள் தூவி கழுத்தில் இருந்து தங்க நகையை பறிக்க முயன்ற பெண்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 32). இவர் லெனின் வீதி கொசப்பாளையத்தில் உள்ள திருமண தகவல் மையம் ஒன்றில் பணி புரிந்து வருகின்றார்,
இந்நிலையில் இவரது அலுவலகத்திற்கு நேற்று காலை பெண் ஒருவர் வந்து தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமி மையத்தின் உரிமையாளர் வெளியே சென்றிருப்பதாகவும் மாலை வரும் படி கூறியுள்ளார்.
அதன் படி மாலை வந்த அப்பெண் தகவல் மையம் வாசலில் நின்று கொண்டிருந்த விஜயலட்சுமி முகத்தில் மிளகாய் தூள் தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.
இதில் சுதாரித்து கொண்ட விஜயலட்சுமி அப்பெண்ணின் கையை கடித்து விட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் செயின் பறிப்பில் ஈடுப்பட முயன்ற பெண்னை பிடித்து உருளையான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் அப்பெண்னை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரேவதி (வயது 32) என்பவதும், வீட்டு வேலை செய்யும் பணி செய்து வந்ததாகவும் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் நீண்ட நாட்கள் வேலைக்கு செல்லாததால் செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் வேலை கேட்பது போல் சென்று நோட்டமிட்டு விஜயலட்சுமி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றதை ஒப்புகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட ரேவதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.