திண்டுக்கல் : கொசவப்பட்டி புனித அந்தோணியாா் திருவிழாவையொட்டி முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் போலீஸ் உட்பட 40 போ் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் தொகுதி கொசவப்பட்டி புனித அந்தோணியாா் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 600- காளைகள் பங்கேற்றன.
கால்நடைத்துறை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்கு பின், 600 காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. அதேபோல் 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்க வந்த நிலையில், 350 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
வாடிவாசல் வழியாக காளைகள், ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை, உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
இதில் வெற்றி பெற்ற காளைகள்,மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ,கட்டில், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மாடு முட்டியதில் 15 வீரா்கள், 11 காளைகளின் உரிமையாளா்கள்,13 பாா்வையாளா்கள்,1 போலீஸ் என மொத்தம் 40 போ் காயமடைந்தனா். இதில் படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.