தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு பள்ளியில் உணவு இடைவேளையில் நாவல் பழம் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த மாணவன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மகேந்திரன்.
பள்ளி உணவு இடைவேளையின் போது மகேந்திரன் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளி வளாகத்தில் இருந்த நாவல் மரங்களிலிருந்து கீழே விழுந்த பழங்களை எடுத்து சாப்பிட்டுள்ளார்.அதன் பிறகு தண்ணீர் குடித்துள்ளார்.சிறிது நேரத்திலேயே பள்ளி வளாகத்திலேயே மாணவன் மகேந்திரன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து மாணவனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.மாணவர் நாவல் பழம் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா?அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.மாணவர் பள்ளியில் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.