Categories: தமிழகம்

நீட் பயிற்சி மையத்தில் சடலமாக கிடந்த மாணவி : இறந்து 2 மணி நேரத்துக்கு பின்னரே தகவல்? நீதி வேண்டி பெற்றோர் கண்ணீர் மனு.!!

கோவை: கோவையில் நீட் பயிற்சி மைய்யத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் நீட் பயிற்சி மையத்தில் ஸ்வேதா என்ற மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது தந்தை பெருமாள் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

தொடர்ந்து தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது : நாங்கள் கோவையில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வந்தாலும், எங்களது மகள் ஸ்வேதா மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைபட்டதன் காரணமாக, நாங்கள் அவளை கோவில்பாளையம் பகுதியில் உள்ள வாரி மெடிக்கல், அகாடமியில், கடந்த 5 மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து படிக்க வைத்து வந்தோம்.

எங்கள் மகள் மன வலிமை மிக்கவர், துணிச்சலானவர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8. 15, மணியளவில் எங்களது மகள், பயிலும் வாரி, அகாடமியில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு எனது மகள் ஸ்வேதா, உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து விட்டார் என்றும், ஸ்வேதாவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம், என்றும் உடனடியாக நீங்கள் மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தார்கள்.

இதனை தொடர்ந்து இரவு 9 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்த பொழுது எங்கள் மகளை ஆம்புலன்சில் படுக்க வைத்திருந்தார்கள். அருகில் சென்று பார்த்தபோது எனது மகள் இறந்த நிலையில் இருந்தார். இது சம்பந்தமாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் மகள், யோகேஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட காதல் பிரச்சனை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து விட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் எங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கருதுகிறேன். அதற்கான காரணங்கள் எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையால் கொல்லப்படுவதற்கு எந்த புகைப்பட ஆதாரம் இல்லை, எனது மகள் மரணத்தை உடனடியாக என்னிடம் தெரிவிக்காமல் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக சொன்ன காரணம் என்ன? எங்க மகள் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும். என்று கண்ணீர் மல்க கூறினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

9 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

9 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

9 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

10 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 hours ago

This website uses cookies.