Categories: தமிழகம்

நீட் பயிற்சி மையத்தில் சடலமாக கிடந்த மாணவி : இறந்து 2 மணி நேரத்துக்கு பின்னரே தகவல்? நீதி வேண்டி பெற்றோர் கண்ணீர் மனு.!!

கோவை: கோவையில் நீட் பயிற்சி மைய்யத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் நீட் பயிற்சி மையத்தில் ஸ்வேதா என்ற மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது தந்தை பெருமாள் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

தொடர்ந்து தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது : நாங்கள் கோவையில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வந்தாலும், எங்களது மகள் ஸ்வேதா மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைபட்டதன் காரணமாக, நாங்கள் அவளை கோவில்பாளையம் பகுதியில் உள்ள வாரி மெடிக்கல், அகாடமியில், கடந்த 5 மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து படிக்க வைத்து வந்தோம்.

எங்கள் மகள் மன வலிமை மிக்கவர், துணிச்சலானவர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8. 15, மணியளவில் எங்களது மகள், பயிலும் வாரி, அகாடமியில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு எனது மகள் ஸ்வேதா, உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து விட்டார் என்றும், ஸ்வேதாவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம், என்றும் உடனடியாக நீங்கள் மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தார்கள்.

இதனை தொடர்ந்து இரவு 9 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்த பொழுது எங்கள் மகளை ஆம்புலன்சில் படுக்க வைத்திருந்தார்கள். அருகில் சென்று பார்த்தபோது எனது மகள் இறந்த நிலையில் இருந்தார். இது சம்பந்தமாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் மகள், யோகேஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட காதல் பிரச்சனை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து விட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் எங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கருதுகிறேன். அதற்கான காரணங்கள் எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையால் கொல்லப்படுவதற்கு எந்த புகைப்பட ஆதாரம் இல்லை, எனது மகள் மரணத்தை உடனடியாக என்னிடம் தெரிவிக்காமல் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக சொன்ன காரணம் என்ன? எங்க மகள் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும். என்று கண்ணீர் மல்க கூறினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

11 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

26 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

34 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

1 hour ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

This website uses cookies.