Categories: தமிழகம்

சிங்கார வேலனே தேவா… கலைத்திருவிழாவில் கவனத்தை ஈர்த்த மாணவன் : நாதஸ்வரம் வாசித்து அசத்திய வீடியோ வைரல்!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவனின் நாதஸ்வரம் அசந்து போன ஆசிரியர்கள் அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்ட கல்வித் துறை சார்பாக கலைத் திருவிழா கடந்த மூன்று நாட்களாக திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் தூய வலனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இக்கலை நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, கொடைக்கானல், வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட மாவட்டத்தில் பத்து தாலுகாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் ஆடல் பாடல் மற்றும் கட்டுரை போட்டி தனித்திறமையை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 3 நாட்களாக நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட நடன போட்டிகளும் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் முன்னிலையிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் சசிதரன் சிறப்பாக நாதஸ்வரம் வாசித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.

இதில் பழைய சினிமா பாடலான தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாடலை அப்படியே வாசித்து காட்டினார். அரசு பள்ளி மாணவர் ஒருவர் அழிந்து போகும் கலையை கையில் எடுத்திருப்பதும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் செல்வராஜ் உட்பட பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்ற பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

https://vimeo.com/779888946

மேலும் அரசு பள்ளி ஆசிரியர் செல்வராஜ் கூறும் பொழுது தற்போது பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரைப் போட்டி உட்பட தனித் திறமை போட்டிகள் நடைபெறுவதால் மாணவ மாணவிகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதற்கு தமிழக அரசுக்கும் தமிழக கல்வித்துறைக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.