Categories: தமிழகம்

சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு சர்ச்சை: மாணவர்கள் அளித்த பரபரப்பு விளக்கம்..தொடரும் விசாரணை..!!

‘முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான சரக ஷபாத் உறுதிமொழியை ஆங்கிலத்தில்தான் வாசித்தோமே தவிர சமஸ்கிருதத்தில் அல்ல’ என்று மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் ஜோதிஷ் குமாரவேல் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30ம் நாள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருத சரக ஷபாத் உறுதிமொழி எடுத்துக் கொண்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேலை, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் அக்கல்லூரியின் மாணவர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தனர். அதில் பேசிய சங்கத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல், ‘சரக ஷபாத்தில் உள்ளவற்றை அப்படியே சமஸ்கிருதத்தில் நாங்கள் வாசிக்கவில்லை.

அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தே நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். நாங்கள் வாசித்தது ஆங்கில மொழியாக்கம்தானே தவிர, நேரடி சமஸ்கிருத மொழி அல்ல.

கடந்த 2019ம் ஆண்டிலிருந்து தேசிய மருத்துவக் கழகம் அளித்துள்ள பரிந்துரையைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். புதிதாக மருத்துவக்கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கான உறுதிமொழி என்று சரக ஷபாத்தைத்தான் தேசிய மருத்துவக் கழகம் பரிந்துரைக்கிறது. அதனையும் அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை.

ஹிப்போகிராட் உறுதிமொழிதான் கட்டாயம் என வலியுறுத்தவுமில்லை. அதே நேரம் சரக ஷபாத் உறுதிமொழியை எடுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தவில்லை. இதற்கிடையே நேற்று பிற்பகல்தான் ஹிப்போகிராட் உறுதிமொழி எடுப்பது குறித்து எங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளும் ஹிப்போகிராட் உறுதிமொழிதான் எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சரக் ஷபாத் உறுதிமொழி கூடாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…

30 minutes ago

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…

50 minutes ago

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

2 hours ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

2 hours ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

3 hours ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

4 hours ago

This website uses cookies.