Categories: தமிழகம்

திடீரென வந்த ஜேசிபி.. வீட்டை இடித்து தள்ளிய கொடூரம்… தவிக்கும் குடியிருப்புவாசிகள் : உரிமையாளர் உட்பட 10 பேர் தப்பியோட்டம்!!

திடீரென வந்த ஜேசிபி.. வீட்டை இடித்து தள்ளிய கொடூரம்… தவிக்கும் குடியிருப்புவாசிகள் : உரிமையாளர் உட்பட 10 பேர் தப்பியோட்டம்!!

லால்குடி அருகே வேலாயுதபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் 35 வயதான சுப்பிரமணி பண்ணையாளரான ஜெயபால் அந்த காலத்தில் வயலில் வேலை செய்வதற்காக சில கூலி ஆட்களை நியமித்துள்ளார்.

அவர்களுக்கு தங்களுடைய களம் போர்ப்பட்டடி இடத்தில் குடும்பத்துடன் குடிசை அமைத்து தங்க அனுமதி அளித்துள்ளார். இவர்கள் கடந்த நான்கு தலைமுறையாக இந்த இடத்தில் கூலி வேலை செய்து வசித்து வருதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபால் காலமாகிவிட்டார். தற்போது அவர் மகன் சுப்ரமணி குடியிருந்தவர்களிடம் இடத்தை காலி செய்யுமாறு கூறியுள்ளார் அதற்கு எங்களுக்கு மாற்று இடம் வேண்டுமென குடியிருந்த கூலித் தொழிலாளிகள் கூறியுள்ளனர்.

ஒரு சில குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் அந்த இடத்தில் குடிசை அமைத்து தங்கி உள்ளனர். நிலத்தின் உரிமையாளருக்கும் குடியிருந்தவர்களுக்கும் கடந்த சில வருடமாக இடத்தை காலி செய்வது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இது குறித்து வருவாய் துறை,காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு பணியில் இருந்த லால்குடி வருவாய் கோட்டாட்சியர் இந்த பிரச்சனையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் வேலாயுதபுரம் கீழ தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான கோமதி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் குடும்பத்தினர் கடந்த 40 வருடங்களாக சுப்பிரமணி என்பவரின் வயல் காட்டில் வேலை செய்து வருவதால் கோமதியின் குடும்பத்திற்கு போதிய இடவசதி இல்லாததால் அவர் இடத்தில் குடிசை அமைத்து தங்க சொல்லி அனுமதித்துள்ளார். கோமதி என்பவர் அந்த இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்படி இடத்தின் உரிமையாளர் சுப்பிரமணி என்பவர் எனது இடத்தை காலி செய்து தருமாறு கூறியுள்ளார். அதற்கு கோமதி திடீரென்று இடத்தை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே செல்வோம். இடத்தை காலி பண்ண முடியாது.இவ்வளவு நாள் நாங்கள் இங்கேதான் இருந்தோம் என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 9ஆம் தேதி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்து மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வேலாயுதபுரத்தில் உள்ள சுப்பிரமணி என்பவர் அடையாளம் தெரியாத 10 க்கும் மேற்பட்ட நபர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கோமதியின் குடிசை வீட்டை இடித்து தரைமட்டமாக்கி சேதப்படுத்தி விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய ஜே சி பி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கோமதி லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிய சுப்பிரமணி மற்றும் அடையாளம் தெரியாத 10 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

6 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

7 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

8 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

9 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

9 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

10 hours ago

This website uses cookies.