ஈரோடு : புஞ்சை புளியம்பட்டி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நம்பியூர் செல்லும் சாலையில் உரச்சாலை என்ற பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்படாத குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் யாரோ தீயை பற்ற வைத்துள்ளனர். குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடந்த இடம் என்பதால் பற்றிய தீ மளமளவென எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதை கண்ட அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.