Categories: தமிழகம்

நடைபயிற்சியின் போது கேபிள் டிவி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் : கைது செய்த 6 பேர் கூறிய பகீர் வாக்குமூலம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கைலாஷ் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் 45 வயதான மாதவன். இவர் சொந்தமாக பம்பரன்சுற்றியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார்.

இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

நெருஞ்சலக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 1/2 சென்ட் இடம் உள்ளது. கோவில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் பதவி வகித்து வருகிறார். இந்த இடத்தை அதே பகுதியைச் 54 வயதான மதி ஆக்கிரமித்துள்ளார்.

கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் 7 ந்தேதி அதிகாலை நடை பயிற்சி சென்றவர் மாதவனை அடையாளம் தெரிய மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொலைக்கான காரணம் கோயில் இடத்தை ஆக்கிரமித்த நபர்களால் நடந்திருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை குறித்து லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்து கொலையை அரங்கேற்றிய லால்குடி அருகே நெருஞ்சலக்குடியைச் சேர்ந்த 54 வயதான மதி, நெய்குப்பை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த 24 வயதான அலெக்ஸ் சுப்பிரமணியன், மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த 37 வயதான ஸ்டீபன் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதான மணிகண்டன், நாமக்கல் மாவட்டம் செம்பேடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான சிவா உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.