ஓடிடியில் நேரடியாக களம் இறங்கி திரைப்படம் இந்த அளவுக்கு வரவேற்பையும், விமர்சனங்களையும் பெறுமா என்ற ஆச்சரியத்தை ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்தியது. இந்த படத்தின் தாக்கம் 200 நாட்களை கடந்து இன்றும் தொடரும் நிலையில், இதன் இயக்குனர் ஞானவேல், சூர்யாவுக்காக மீண்டும் ஸ்க்ரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளார்.
இதற்கு சூர்யாவும் ஓகே சொன்ன நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது பாலா இயக்கி வரும் தனது 41வது படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். வாடிவாசல் படத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ப்ரீ புரொடக்சன் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெறவுள்ளது. இங்கு படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இதன்பின்னர் வாடிவாசல் ஷூட்டிங்கை முடிக்கும் சூர்யா அடுத்ததாக ஞானவேலுடன் இணைகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஜெய்பீம் திரைப்படம் இன்று வரை சர்ச்சையாக எழுந்து வரும் நிலையில் மீண்டும் அதே இயக்குனருடன் சூர்யா சேர இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
This website uses cookies.