சாலையோர வியாபாரிகளை கொண்டாடும் விதமாக கோவையில் ‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வஉசி மைதானத்தில் ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சாலையோர வியாபாரிகள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.
குறிப்பாக சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களின் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன்,மண்டல தலைவர் மீனா லோகு, மத்திய அரசின் பார்வையாளர் நிஸ்தா கக்கர்,வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மத்திய மற்றும் மாநில அரசின் கடன் பெற்று சிறப்பாக செயல்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிதாக கடன் உதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டது.
தொடர்ந்து சாலையோர வியாபாரிகளின் தினந்தோறும் படும் கஷ்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த நாடகங்கள் மற்றும் நடனங்கள் அரகேற்றப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.