தமிழக முதல்வர் யாரை கைக்காட்டினாலும் அவர் தான் வருங்கால ஒன்றிய பிரதமராக அமர்வார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கலைஞர் திடலில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 700 பேருக்கு தையல் மிஷன்,400 நபருக்கு சலவை பெட்டி, 500 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், 61 மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தமாக 2000 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கழக முன்னோடிகள் 300 பேருக்கு பொற்கிழியையும் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவில்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும், தமிழக முதல்வர் யாரை கைக்காட்டினாலும் அவர் தான் வருங்கால ஒன்றிய பிரதமராக அமர்வார் என கூறினார்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.