Categories: தமிழகம்

குப்பைக்கு கூட வரி போட்டவர்தான் தமிழக குப்பை முதலமைச்சர் ஸ்டாலின் : சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்!!

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக திமுக அரசில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தக்காளி விலை உயர்வினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், செயல்படாத தமிழக முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததால் விலைவாசியை கண்டுக்குள் கொண்டு வருவோம் மக்களை பாதிக்கிற திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

அதனை பின்பற்றாமல் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு திருடர்கள் மாடல் ஆட்சி நடைபெறுவதாகவும் இவர்களின் வேஷங்கள் கலைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தவறுகளை மூடி மறைத்தாலும் அணைத்தும் கலைகின்ற நேரம் வந்துவிட்டதாகவும் திமுக ஆட்சி வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது இந்த ஆட்சியிலுள்ள திருடர்கள் திகார் ஜெயலிக்கும், புழல் சிறைக்கும் அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும் செந்தில் பாலாஜியை அடுத்து பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்க துறை விசாரனை செய்யும் காவல் துறையை கையில் வைத்துகொண்டு திமுகவின் தொண்டர்படையாக காவல் துறை செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

அமலாக்க துறையை வைத்து கொண்டு எதிர்கட்சிகளை பாஜக முடக்க பார்ப்பதாக கூறும் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை வைத்து கொண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை செய்யும் போது தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.

இது வெறும் சோதனை தான் இன்னும் இருக்கிறது உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை வரும் போது தான் தெரியும். உப்ப தின்னவன் தண்ணீ குடிச்சி தான் ஆகனும் ஊழல் குறித்து பேசும் அருகதை ஸ்டாலினுக்கோ அவரது குடும்பத்தினருக்கே கிடையாது என்றும் குப்பைக்கு கூட குப்பை வரி போட்டவர்தான் தான் தமிழக குப்பை முதல்வர் விஞ்ஞான ரீதியில் கொள்ளை அடிக்கும் நிலை தான் திமுகவில் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் திருடர்களான ஸ்டாலின் ஆட்சியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், மக்களுக்கான பணத்தை தமிழக முதலமைச்சர் கொள்ளையடித்து கொண்டிருப்பதால் தான் ஒவ்வொருத்தராக ஜெயிலுக்கு சென்று கொண்டிருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் கொரனோ காலத்திலும் விலைவாசி கட்டுக்குள் இருந்தது.திமுக ஆட்சியில் விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என கூறினார்.

நிர்வாகம் செய்வதற்கு திமுக ஆட்சிக்கு நேரமில்லை எப்போது அமலாக்க துறையினர் வருவார்கள் என அமைச்சர்கள் பயத்தில் உள்ளனர். தமிழகத்தில் நிழல் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் பெங்களுரிவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்றபோது கூட்டணியில் உள்ள கர்நாடகாவிடம் தண்ணீர் குறித்தும், தக்காளி விலை உயர்வை கட்டுபடுத்துவது குறித்து பேசவில்லை என சிவி சண்முகம் குற்றச்சாட்டினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.