Categories: தமிழகம்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் : மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மனு…

திருவாரூர் : உக்ரைன் நாட்டில் படித்துவரும் திருவாரூரைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

திருவாரூர் காரைக்காட்டு தெருவை சேர்ந்த நைனார் முகமது என்பவரின் மகன் ஜெயினுல் ஆரிஃப் மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மகள் அபிராமி ஆகியோர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மருத்துவம் படித்து வருவதாகவும், உக்ரைனில் தற்போது போர் நடைபெற்று வருவதால் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து இருக்கும் அவர்களை மீட்டு தரவேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இதில்  திருவாரூர் காரைக்காட்டுத் தெருவைச் சேர்ந்த ஜெயினுல் ஆரிஃப் கார்கிவ் நேஷனல் மெடிக்கல் யூனிவர்சிட்டியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி உக்ரைன் நாட்டிற்கு மருத்துவப் படிப்பிற்காக சென்றுள்ளார். இவரது தாய் ஷபானா திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது பெற்றோர்கள் தங்கள் மகன் பதுங்குகுழியில் தஞ்சமடைந்து உள்ளதாகவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படுவதாகவும், அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தற்போது ரஷ்யப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது மகனை பத்திரமாக மீட்டு தரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

மேலும் இது குறித்து ஜெய்னுல் ஆரிபின் தந்தை நைனார் முகமது கூறுகையில், நாங்கள் கடந்த மூன்று நாட்களாக தூக்கம் இன்றி தவித்து வருகிறோம், அங்கு உள்ள மாணவர்கள் தரைவழியாக 1300 கிலோ மீட்டர் பயணித்தால் மட்டுமே உக்ரனை விட்டு வெளியேற முடியும் எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீட்டு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  இதேபோன்று குடவாசல் தாலுக்கா விஷ்ணுபுரம் கைக்கோலர் தெருவை சேர்ந்த அபிராமி என்பவர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.இவர் தற்போது பதுங்குகுழியில் தஞ்சமடைந்து உணவு மற்றும் பிற தேவைகளுக்காக சிரமப்படுவதால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களது மகளை மீட்டு தர வேண்டும் என அவரது தந்தை வைத்தியநாதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

KavinKumar

Recent Posts

நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…

வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…

10 minutes ago

படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!

பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…

22 minutes ago

6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்

தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி  விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…

58 minutes ago

நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய தயாரிப்பாளர்!

விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…

1 hour ago

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

16 hours ago

This website uses cookies.