சென்னை : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவ, மாணவிகளை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 2வது நாளாக நடந்து வரும் இந்த போரில், டாங்கிகள், போர் விமானங்கள் மூலமாக, சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. இந்தத் தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
பணி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உக்ரைன் சென்றுள்ள இந்தியா உள்ளிட்ட பிற நாட்டவர்களை, அந்தந்த நாடுகள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், போர் பதற்றம் காரணமாக, மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவ, மாணவிகளை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த மாணவி பார்கவி, சூலூரை சேர்ந்த மாணவி ரஞ்சினி உள்ளிட்டோர் உக்ரைனில் மருத்துவம் பயின்று வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் போரால் அவர்கள் அங்கு பெரும் அச்சத்துடன் தவித்து வருகின்றனர். போர் பதற்றம் நிறைந்த இடத்தில் அவர்கள் சிக்கியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் தயாராக இருக்கும்படி பல்கலைக்கழகம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், உயிரை கையில் பிடித்தபடி இருப்பதாகவும், கோவை, திருப்பூரைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் அங்கு தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
உக்ரைனில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தவித்து வரும் தமிழக மாணவ, மாணவிகள் அனைவரும், உடனடியாக நாடுதிரும்பவும், அதுவரை அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.