Categories: தமிழகம்

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சனை: கோவையில் தாசில்தாரின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை…போலீசார் விசாரணை!!

கோவை: தாசில்தாரின் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசரணை மேற்கொண்டுள்ளனர்.

கவுண்டம்பாளையத்தை அடுத்த பாலன் நகரை சேர்ந்தவர் சபரீசன்(59). இவரது மனைவி சர்மிளா. சர்மிளா பேரூர் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். சபரீசன் பணிக்கு செல்லாமல் இருப்பதாகவும் குடிபழக்கம் அதிகம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி குடும்பதத்தில் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று அவர் அவரது இல்லத்தில் கேபிள் வையர் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரீசனுக்கு அதிக குடிபழக்கம் இருக்கின்ற காரணமாக இல்லத்தில் ஏற்படும் தகராறில் மன உளைச்சலில் இருந்ததாகவும் சில மாதங்களுக்கு முன் குடிப்பழக்கத்தை நிறுத்த சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

23 minutes ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

54 minutes ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

2 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

2 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

3 hours ago

This website uses cookies.