சிறுத்தை தாக்கியதில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேயிலை தோட்டத் தொழிலாளியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் சிறுகுன்றா என்ற தனியார் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அணில் ஓராண் என்பவரை இரு தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று தாக்கியது.
இதனை அடுத்து அவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அவரை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் 10,000 நிவாரண தொகையினை வழங்கி அணில் ஓரானின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.