சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 57 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 20 சவரன் மீட்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரை சேர்ந்தவர் பிரிய பிரசாத். அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் , கடந்த ஏப்ரல் 23ம் தேதி பூட்டு உடைத்து பீரோவில் இருந்து 57 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சம்பவம் தொடர்பாக ஐ.சி.எப்., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் , செங்குன்றம் முண்டி அம்மா நகரை சேர்ந்த கோகிலா (30) அவரது கூட்டாளியான சரவணன் (34) இருவரும் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் ஐ.சி.எப் கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகில் கோகிலாவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை, பூக்கடை பகுதியில் விற்றாத ஒப்புக் கொண்டார்.
பின், அங்கு சென்று 20 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து , கோகிலாவை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக கூட்டாளி சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.