சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 57 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 20 சவரன் மீட்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரை சேர்ந்தவர் பிரிய பிரசாத். அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் , கடந்த ஏப்ரல் 23ம் தேதி பூட்டு உடைத்து பீரோவில் இருந்து 57 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சம்பவம் தொடர்பாக ஐ.சி.எப்., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் , செங்குன்றம் முண்டி அம்மா நகரை சேர்ந்த கோகிலா (30) அவரது கூட்டாளியான சரவணன் (34) இருவரும் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் ஐ.சி.எப் கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகில் கோகிலாவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை, பூக்கடை பகுதியில் விற்றாத ஒப்புக் கொண்டார்.
பின், அங்கு சென்று 20 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து , கோகிலாவை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக கூட்டாளி சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.